Published : 12 Jan 2025 07:08 AM
Last Updated : 12 Jan 2025 07:08 AM

பாலியல் வழக்குகளுக்கு 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பாலியல் குற்ற வழக்​குகளை விசா​ரிக்க சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 7 இடங்​களில் தனி சிறப்பு நீதி​மன்​றங்கள் அமைக்​கப்​படும் என்று சட்டப்​பேர​வை​யில் முதல்வர் ஸ்டா​லின் அறிவித்​துள்ளார்.

சட்டப்​பேர​வை​யில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதத்​துக்கு முதல்வர் ஸ்டா​லின் நேற்று பதில் அளித்​தார். அதன் நிறைவாக, 4 முக்கிய அறிவிப்புகளை வெளி​யிட்டு முதல்வர் பேசி​ய​தாவது:

பெண்​களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்​குகளை விசா​ரிக்க சென்னை, அதன் சுற்றுப்புற பகுதி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய இடங்​களில் புதிதாக 7 தனி சிறப்பு நீதி​மன்​றங்கள் அமைக்​கப்​படும். பாலியல் குற்ற வழக்​குகளை விரைந்து முடிக்க, மாவட்​டம்​ தோறும் கூடுதல் காவல் கண்காணிப்​பாளர் தலைமை​யில் சிறப்புக் குழு அமைக்​கப்​படும். இத்தகைய குற்​றங்​களில் தண்டனை பெற்று, சிறை​யில் அடைக்​கப்​பட்ட கைதி​களுக்கு முன்​விடுதலை கிடைக்காத வகையில் தமிழக சிறைத் துறை விதி​களில் திருத்தம் செய்​யப்​படும்.

புதிய மாநக​ராட்சிகள், நகராட்​சிகள் உதயமாகி உள்ளன. இந்த நகரங்​களில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்​யும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதி​யாக, சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநக​ராட்​சிகள் மற்றும் நகராட்​சிகள், பேரூராட்​சிகளில் புதிய சாலைகள் அமைக்​க​வும், பழுதடைந்​துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்​பிக்​க​வும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளால் சேதமடைந்​துள்ள சாலைகளை சீரமைக்​க​வும் வரும் ஆண்டு​களில் ரூ.3,750 கோடி​யில் நகர்ப்புற சாலை பணிகள் மேற்​கொள்​ளப்​படும்.

மக்களுக்கான போக்கு​வரத்து வசதியை மேம்​படுத்த, வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்​துகள் கொள்​முதல் செய்​யப்​பட்டு, விரைவாக பயன்​பாட்டுக்கு கொண்டு வரப்​படும். இந்த அரசு பதவி ஏற்ற பிறகு, ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2.67 லட்சம் மனைகளை வரன்​முறைப்​படுத்தி இ-பட்​டாக்கள் வழங்​கப்​பட்​டுள்ளன. அடுத்த 2 ஆண்டு​களில், அவர்​களது தேவைகளை பூர்த்தி செய்​யும் விதமாக, கையகப்​படுத்​தப்​பட்ட நிலங்களை சீர்​செய்​தும், பு​திதாக நிலங்களை கையகப்​படுத்​தி​யும் ஒரு லட்​சம் வீட்டுமனை பட்​டாக்​கள் வழங்​கப்​படும். இவ்​வாறு ​முதல்​வர் அறிவித்தார்​.

ஆளுநர் மீது விமர்சனம்: தமிழக சட்டப் பேரவையின் மாண்​பை​யும் மதிக்​காமல், மக்களது எண்ணங்​களுக்​கும் மதிப்பு தராமல் தமிழ்த்​தாய் வாழ்த்​தையே அவமானப்​படுத்த துணிந்​ததன் மூலமாக, தான் வகிக்​கும் பதவிக்​கும் பொறுப்​புக்​கும் இழுக்கு ஏற்படுத்​தும் செயலை அரசியல் உள்நோக்​கத்​துடன் ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது. இனியும் காணக் கூடாதது என்று பதிலுரையில் முதல்வர் ஸ்​டா​லின் ஆளுநரை விமர்சித்தார்.

‘அப்பா’ என்பதில் மகிழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையின்போது, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்று கூறி, ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார். அப்போது, ‘‘புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தால் பயன்பெறும் மாணவிகள் என்னை ‘அப்பா’ என்று அழைப்பதை கேட்டு மிகவும் மகிழ்வுற்றேன்’ என்று தெரிவித்தார். அவ்வாறு சொல்லும்போது உணர்ச்சிப் பெருக்கில் முதல்வர் கண்கலங்கினார். சில நிமிடங்களுக்கு பிறகு முதல்வர் பேச்சை தொடர்ந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x