இலங்கை கடற்படையினரால் 17 பேர் கைது - ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு 

இலங்கை கடற்படையினரால் 17 பேர் கைது - ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு 
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் நாளை (புதன்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சேகு பூண்டி ராஜ், அந்தோணி ஆரோன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் பூண்டி ராஜ், அமல்ராஜ், யாக்கோபு, கிருபாகரன், அருள் தினகரன், மாதவன், அந்தோணி ஈசாக், டேவிட், கார்த்திகேயன், இருதயம், ஆரோக்கியதாஸ், அந்தோனியார் அடிமை, ரோகன்ஸியன், முனியாண்டி, ஜெகநாதன், ராமன், ராமச்சந்திரன் ஆகிய 17 மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 பேர்.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 17 பேர்.

17 மீனவர்களையும், மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இந்நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக் கண்டித்தும், சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தியும் நாளை புதன்கிழமை ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in