தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 14 பேருக்கு அபராதம் விதித்து, விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சேகு இருதயம், மெஜோ ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் டிச.04 அன்று சிறைப்பிடித்தனர்.

இரண்டு படகுகளிலிருந்த ரிபாக்சன், ராஜ பிரபு, அரவிந்த், ராபின்ஸ்டன், முனீஸ்வரன், பிரசாந்த், ஆரோக்கியம், பெட்ரிக் நாதன், யோபு, ஜான் இம்மரசன், அருள் பிரிட்சன், நிஷாத், வினித், அந்தோணி லிஸ்பன் ஆகிய 14 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் நிறைவடைந்ததை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ரஃபீக், 14 மீனவர்களுக்கும் தலா ரூ. 7 லட்சம் (இந்திய மதிப்பு ரூ. 2 லட்சம்) அபராதம் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in