Published : 29 Jul 2018 03:28 PM
Last Updated : 29 Jul 2018 03:28 PM
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பானது.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரம் வீடு சென்னை அடையாறில் உள்ளது. இன்று நண்பகல் 12.30 மனியளவில் அவர் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியது பரபரப்பாகியுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கார் டிரைவர், புகைப்பட கலைஞர் ஆகிய இருவர் காயமடைந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறுகிறது.
குண்டு வீச்சின் போது தினகரன் அங்கு இல்லை.
கட்சிப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட நீக்கப்பட்ட அதிருப்தியாளர் ஒருவர் வீட்டினருகே வந்து குண்டு வீசியதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அவர் கொண்டு வந்த சூட்கேசில் கூர்மையான ஆயுதன் வைத்திருந்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காஞ்சிபுரம் நிர்வாகி புல்லட் பரிமளம் என்பவர் கொண்டு வந்த பெட்ரோல் குண்டு அவரது காரிலேயே வெடித்ததாகத் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT