‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காக்கும் திராவிட மாடல் அரசு’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் காக்கும் திராவிட மாடல் அரசு’ - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: “மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு” என்று உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில்,“அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை,” என்று முதல்வர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in