அரசியல் அடையாளத்தை இழக்கிறார்களா வீரபாண்டியார் வாரிசுகள்..?

வீரபாண்டியார், பிரபு,  தருண், மலர்​விழி
வீரபாண்டியார், பிரபு, தருண், மலர்​விழி
Updated on
2 min read

கருணாநிதியே மறுத்துச் சொல்லத் தயங்கும் அளவுக்கு திமுகவின் பவர்ஃபுல் மாவட்டச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் சேலம் வீரபாண்டி ஆறுமுகம். பொதுக்குழுவில் வீரபாண்டியார் பேச எழுந்தால் அதுதான் மாலைப் பத்திரிகைகளில் தலைப்பாகும். 1993-ல் வைகோ பிரச்சினை எழுந்த போது அவருக்காக மதுரை விராட்டிபத்து பொதுக்குழுவில் தரையில் அமர்ந்து நியாயம் கேட்டவர் வீரபாண்டியார்.

இத்தனை இருந்தாலும் சேலத்தை திமுக கோட்டையாக வைத்திருந்ததால் அவரை கருணாநிதியாலேயே எதுவும் செய்யமுடியவில்லை. சேலம் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் நேரடியாக தலையிட சக திமுக அமைச்சர்களே தயங்கிய காலங்களும் உண்டு.

இப்​படி​யெல்​லாம் சிம்ம சொப்​பனமாக இருந்த வீரபாண்​டி​யார் 2012 நவம்பர் 23-ல் காலமா​னார். அதுவரைக்​குமே அவர் சேலம் மாவட்ட திமுக செயலா​ளராக இருந்​தார். அவரது மறைவுக்​குப் பிறகு சேலம் திமுகவே செயலிழந்து போனது என்பார்​கள். அண்மையில் அவரது நினைவு நாள் கூட அப்படித்தான் அரவமின்றி கடந்து போயிருக்கிறது.

1962-ல் தொடங்கி 6 முறை எம்எல்​ஏ-வாக இருந்த வீரபாண்​டி​யார், 3 முறை வேளாண் துறைக்கு அமைச்​சராக இருந்​திருக்​கிறார். தனது காலத்​திலேயே தனது மகன் வீரபாண்டி ராஜாவுக்கு சட்டப் பேரவைத் தேர்​தலில் சீட் கேட்​டார் வீரபாண்​டி​யார். அப்போது, “இம்​முறை குடும்பத்​தில் ஒருவருக்​குத்​தான் சீட்” என தலைமையி​லிருந்து தகவல் சொல்​லப்​பட்​டது. அதற்கு கொஞ்​ச​மும் யோசிக்​காமல், “அப்​படி​யா​னால் இம்முறை தலைவர் நிற்​கப்​போவ​தில்​லை​யா?” என்று வீரபாண்​டி​யார் கேட்​ட​தாகச் சொல்​வார்​கள்.

இப்படி​யெல்​லாம் தலைமை​யையே மிரள​வைத்த வீரபாண்​டி​யாரின் வாரிசுகள் இன்று அரசியல் முத்​திரை இல்லாமல் இருக்கிறார்​கள். வீரபாண்​டி​யார் இருந்​தவரை கட்சிக்​குள் இருந்த இடம் தெரி​யாமல் இருந்​தவர்கள் எல்லாம் இப்போது அவரது படத்​தைப் போட்டு போஸ்டர் அடிக்​கக்கூட யோசிக்​கிறார்​கள். மீண்​டும் அந்தக் குடும்பம் தலையெடுத்து​விடக் கூடாது என்ப​தில் அத்தனை கவனம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சேலம் மாவட்ட திமுகவினர் சிலர், “வீர​பாண்​டி​யார் மறைவுக்​குப் பின் அவரின் 2-வது மகன் வீரபாண்டி ராஜா சேலம் கிழக்கு மாவட்டச் செயலா​ளராக இருந்​தார். ஆனால், அவர் 2021-ல் மாரடைப்​பால் காலமாகி​விட்​டார். தற்போது வீரபாண்​டி​யாரின் மூன்​றாவது மகன் பிரபு கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்​பாளராக இருக்​கிறார். இவர் உதயநிதிக்​கும், அன்பில் மகேஸுக்​கும் விசு​வாசமாக இருக்​கிறார்.

வீரபாண்​டி​யாரின் மூத்த மகன் வீரபாண்டி செழியன். இவரது மருமகன் மருத்​துவர் தருண் திமுக ஐடி விங்​கில் மாநில பொறுப்​பில் உள்ளார். 2021-ல் வீரபாண்டி தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோற்​றார். இம்முறை இவரும் வீரபாண்டி பிரபு​வும் சேலம் மேற்கு தொகு​தியை குறி வைத்து காய்​நகர்த்தி வருகிறார்​கள்.

வீரபாண்டி ராஜா​வின் மகள் மலர்​விழி பொதுக்​குழு உறுப்​பினராக உள்ளார். அரசி​யலில் அத்தனை தீவிரம் காட்டாத இவர், விஎஸ்ஏ கல்லூரி நிர்​வாகத்தை கவனித்து வருகிறார். ஒரு காலத்​தில், சேலத்​தைப் பொறுத்​தவரை யாருக்கு சீட் தரவேண்​டும், தரக்​கூ​டாது என்பதை வீரபாண்​டி​யார் தான் ​முடிவு செய்​வார். ஆ​னால், இப்​போது அவரது ​வாரிசுகள் அடுத்​தவர் தயவை எ​திர்​பார்த்​துக் ​காத்​திருக்க வேண்டிய நிலை​யில் இருக்​கிறார்​கள்” என்​றார்​கள்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in