இந்திய அரசமைப்பு முகப்புரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தலைமைச் செயலர், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அரசமைப்பு முகப்புரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாசிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தலைமைச் செயலர், துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய சட்ட நாளையொட்டி முதல்வர் தலைமையில் அரசமைப்பு முகப்புரை வாசிப்பு: அரசு, கட்சி அலுவலகங்களில் உறுதிமொழி

Published on

சென்னை: தேசிய சட்ட நாளை​யொட்டி அரசு அலுவல​கங்​கள், கட்சி அலுவல​கங்​களில் உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது.

இந்திய அரசி​யலமைப்பு தினம் (தேசிய சட்ட நாள்) நேற்று நாடு முழு​வதும் கொண்​டாடப்​பட்​டது. இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-ம் ஆண்டு நாளை​யொட்டி சென்னை தலைமை செயல​கத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தலைமை​யில் இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்​கப்​பட்​டது.

இந்நிகழ்​வில் நீர்​வளத் துறை அமைச்சர் துரை​முருகன் உள்ளிட்ட அமைச்​சர்​கள், தலைமைச் செயலர் நா.முரு​கானந்​தம், துறை செயலர்​கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்​து​கொண்​டனர். பூந்​தமல்லி அருகே தண்டலத்​தில் உள்ள தனியார் நிகர்​நிலைபல்கலைக்​கழகம் சார்​பில் நடைபெற்ற தேசிய சட்ட நாள் கருத்​தரங்​கில் ஆளுநர் ஆர்.என்​.ரவி பங்கேற்று சிறப்பு​ரை​யாற்றினார். இந்நிகழ்​வில், பல்கலைக்கழக வேந்தர் என்.எம்.வீரையன் உள்ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

சென்னை ரிப்பன் மாளி​கை​யில் மாநக​ராட்சி சார்​பில் இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்​தின் முகப்பு​ரை​யினை கூடுதல் ஆணையர் (சுகா​தா​ரம்) வி.ஜெயசந்திரபானுரெட்டி தலைமை​யில் மாநக​ராட்சி அலுவலர்​கள், பணியாளர்கள் வாசித்தனர். பாஜக மாநில தலைமை​யிடமான கமலால​யத்​தில் வழக்​கறிஞர் அணி சார்​பில் மாநிலத் துணைத்​தலைவர் ஆர்.சி.பால்​க​னக​ராஜ் தலைமை​யில் வழக்​கறிஞர்கள் இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் உருவப்​படத்​துக்கு மாலை அணிவித்து உறுதி​மொழி ஏற்றனர்.

தமிழக காங்​கிரஸ் சார்​பில் சத்தி​யமூர்த்தி பவனில் நடந்த உறுதி​யேற்பு நிகழ்ச்​சி​யில், தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்​தகை, தமிழ்​நாடு மாநில சிறு​பான்​மை​யினர் ஆணையத்​தின் முன்​னாள் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வழக்​கறிஞர்கள் கலந்​து​கொண்​டனர். சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவல​கத்​தில் மாநிலச் செயலாளர் இரா.​முத்​தரசன் தலைமை​யில் அரசி​யலமைப்பு சட்ட தின உறுதி​மொழி ஏற்கப்​பட்​டது. அசோக்​நகரில் உள்ள விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி தலைமை அலுவல​கத்​தில் அரசமைப்புச் சட்டம் குறித்த நூல்கள் வெளி​யீடு நிகழ்ச்சி நடைபெற்​றது. இதில், விசிக தலைவர் திரு​மாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்​து​கொண்டனர். தேசிய சட்ட நாள் குறித்து அரசியல் தலைவர்கள் விடுத்த அறிக்கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை: இந்திய அரசி​யலமைப்பு தினம் கொண்​டாடப்​படும் இந்நாளில், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்​பிகள் வலியுறுத்திய மதிப்​பீடுகளை உறுதி​யோடும், நேர்​மையோடும் நிலைநிறுத்து​வோம் என்று உறுதி​யேற்​போம். எதிர்க்​கட்​சித் தலைவர் பழனிசாமி: அரசியல் சாசன தினமாக கொண்​டாப்​படும் இந்த வேளை​யில், நமது இந்திய அரசி​யலமைப்பு சட்டத்​தின் முகப்​பில் பொறிக்​கப்​பட்​டுள்ள அனைத்து தன்மை​களை​யும் பேணிக்​காக்க உறுதி​யேற்​போம்.

பாமக நிறு​வனர் ராமதாஸ்: இந்தியாவை இயக்குவது அரசி​யலமைப்புச் சட்டம்​தான். இறையாண்மை அளிப்​பதும் இச்சட்​டம்​தான். அத்தகைய சிறப்புமிக்க அரசியல் சட்டத்தை மதித்து நடப்​போம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்​ஹாசன்: இந்திய அரசி​யலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அந்த 299 பெரு​மக்​களைப் பெரு​மைப்​படுத்​தும் விதமாக இன்னும் நிறைவேறாத புதிய இந்தியா​வுக்கான கனவுகளை நனவாக்க உழைப்​போம். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​துள்ளனர்.

இதே​போல், பாமக தலை​வர் அன்​புமணி, தே​மு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ​விஜய​காந்த், அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் எம்​.எச்​.ஜவாஹிருல்லா உள்​ளிட்​டோரும் தேசிய சட்ட நாளை ​போற்​றுவோம்​ என தெரி​வித்​துள்​ளனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in