செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குறுக்கு விசாரணை

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் குறுக்கு விசாரணை
Updated on
1 min read

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் தடயவியல் துறை அதிகாரியிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியிருந்தார். விசாரணைக்கு தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஆஜரானார். அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சி.ஆர்.மலர்வண்ணன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

குறுக்கு விசாரணை நிறைவடையாத நிலையில், விசாரணையை நவ.29-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஆஜராக உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in