பக்​கவாதம் பாதிப்பு ஏற்படு​பவர்​களில் 5% மட்டுமே சரியான நேரத்​தில் சிகிச்​சைக்கு வருகிறார்கள்: மருத்​துவர் ஆர்.எம்.பூபதி தகவல்

உலக பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை
அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு துறை தலைவர் ஆர்.எம்.பூபதி, மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.
உலக பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவமனை இயக்குநர் ஆர்.மணி, நரம்பியல் சிகிச்சைப் பிரிவு துறை தலைவர் ஆர்.எம்.பூபதி, மருத்துவர்கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்றனர்.
Updated on
2 min read

சென்னை: உலகம் முழு​வதும் ஆண்டு​தோறும் அக். 29-ம் தேதி பக்கவாத நோய் தடுப்பு விழிப்பு​ணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஓமந்​தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்​துவமனை மூளை மற்றும் நரம்​பியல் துறை சார்​பில், பக்கவாத நோய் விழிப்பு​ணர்வு பேரணி நடைபெற்​றது. மருத்​துவமனை இயக்​குநர் ஆர்.மணி தலைமை​யில் நடந்த பேரணி​யில் நரம்​பியல் சிகிச்சை பிரிவு துறை தலைவர் ஆர்.எம்​.பூபதி உட்பட மருத்​துவர்​கள், செவிலியர் மாணவிகள் பங்கேற்​றனர். பின்னர், விழிப்பு​ணர்வு கலை நிகழ்ச்​சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்​சி​யில் நரம்​பியல் சிகிச்​சைத் துறை தலைவர் மருத்​துவர் ஆர்.எம்​.பூபதி பேசி​ய​தாவது: மூளைக்​குச் செல்​லும் ரத்தக் குழாய்​களில் அடைப்பு ஏற்படு​தல், ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்தப்​போக்கு உருவாகுதல், இதயம் சரியாக வேலை செய்​யாமை மற்றும் மூளை​யி​லிருந்து கெட்ட ரத்தம் அடைபட்டு போதல் உள்ளிட்ட காரணங்​களால் பக்கவாதம் ஏற்படு​கிறது.

இதில், ரத்தக் குழாய் அடைப்​பால்​தான் பெரும்​பாலானோருக்கு பக்கவாதம் வருகிறது. உடலின் ஒரு பக்கத்​தில் திடீரென உணர்​வின்மை அல்லது பலவீனம், திடீர் குழப்​பம், பேசுவ​தில் சிரமம், பேச்சை புரிந்​து​கொள்​வ​தில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் மூலமாக பக்கவாத பாதிப்பை கண்டறிய முடி​யும்.

பக்கவாத பாதிப்பு ஏற்பட்ட முதல் 6 மணி நேரம் முக்​கிய​மானது. அருகில் உள்ள அரசு மருத்​துவ​மனை​களில் ரத்த உறைவை கரைக்​கும், ‘க்ளாட் பஸ்டர்’ மாத்​திரை போன்ற, ‘த்ரோம்​போலிசிஸ்’ சிகிச்சை முறை வழங்​கப்​படு​கிறது. இந்த சிகிச்​சையை உடனடியாக எடுக்​கா​விட்​டால், மூளை திசுக்கள் அழிந்து, நிரந்தர பக்கவாதமாக மாறி​விடும். 100 நோயாளி​களில் 40 பேர் பக்கவாதம் உள்ளிட்ட நரம்​பியல் சார்ந்த நோய்​களுக்கு சிகிச்​சைக்கு வருகின்​றனர். அவர்​களில், 5 சதவீதத்​துக்கு குறைவானவர்​களே, ஆரம்பத்​தில் கண்டறிந்து சிகிச்​சைக்கு வருகின்​றனர்.

பக்கவாதம் வருவதற்கு உணவு, உடற்​ப​யிற்சி மற்றும் தூக்கம் சரியான முறை​யில் இல்லாதது, உரிய நேரத்​தில் சாப்​பிடாதது, கண்ட நேரங்​களில் துரித உணவு உள்ளிட்​ட​வற்றை சாப்​பிடுதல் உள்ளிட​வையே காரணம். நரம்​பியல் சார்ந்த பாதிப்பு இளம் வயதினரிடையே அதிகரித்​துள்ளது. மது அருந்​துதல், புகைபிடித்தல் போன்ற பழக்​கங்களை தவிர்க்க வேண்​டும். வீட்​டில் சமைக்​கப்​பட்ட உணவு, இரவில் தூக்​கம், சரியான நேரத்​தில் சாப்​பிடுவது ஆகிய​வற்றை கடைபிடித்​தால் பக்கவாதம் போன்ற பாதிப்பு​களி​லிருந்து தற்காத்​துக் கொள்ள முடி​யும். இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

மருத்​துவமனை இயக்​குநர் மருத்​துவர் ஆர்.மணி கூறுகை​யில், “நம்​முடைய அன்றாட உணவில் அதிக அளவு எண்ணெய், உப்பு சேர்த்​தலும் பக்கவாதத்​துக்கு காரணமாக இருக்​கிறது. தற்போதைய காலகட்​டத்​தில் உடற்​ப​யிற்சி செய்​யாமல் எங்கு சென்​றாலும் வாகனத்​தில் செல்​கிறோம். சரியான நேரத்​துக்கு தூங்​கு​வ​தில்லை.

இதன் மூலம் மன உளைச்​சல், மன அழுத்தம் உருவாகிறது. எனவே, இந்த 3 வகை பிரச்​சினைகள் இல்லாமல் வாழ்க்கையை கொண்​டு​செல்ல வேண்​டும். அனைத்து அரசு மருத்​துவ​மனை​களி​லும் ​முதலமைச்​சரின் ​விரிவான மருத்​துவக் ​காப்​பீட்டுத் ​திட்​டத்​தின் மூலம், பக்​கவாத பா​திப்​புக்கு இல​வசமாக சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in