Published : 05 Jun 2018 10:42 AM
Last Updated : 05 Jun 2018 10:42 AM

விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள் ளார்.

எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி செய்து வருபவர் எஸ்.சிவகுமரன். இவர் நேற்று முன்தினம் காலை 8.45 மணிக்கு எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலை ரவுண்டானா அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார்.

அப்போது பைக்கில் வந்த பிரசன்னா (35) என்ற இளைஞர் எதிரே வந்த கார் மீது மோதி கீழே விழுந்து சுயநினைவு இல்லாமல் கிடந்தார்.

அருகில் பணியிலிருந்த தலைமைக் காவலர் சிவகுமரன் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய பிரசன்னாவுக்கு முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றினார். அவருக்கு பல தரப்பிலும் பாராட்டு குவிந்தது.

இந்நிலையில் துரிதமாக செயல்பட்டு விபத்தில் சிக்கிய இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய தலைமைக் காவலர் சிவகுமரனை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x