அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லாததே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு சான்று: இபிஎஸ்

அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லாததே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு சான்று: இபிஎஸ்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க முதல்வர் ஸ்டாலின் இனியாவது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே கடந்த நவம்பர் 5-ஆம் தேதி திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசு மருத்துவர் முத்து கார்த்திகேயனை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக செய்திகள் வந்தன.

அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி குற்றவாளிகள் செய்யலாம் என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

கத்திக் குத்தால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அவரைத் தாக்கியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், தனது ஆட்சியின் எல்லா தவறுகளையும் ஏதேனும் மாய விளம்பர பிம்பத்தைக் கொண்டு மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை விடுத்து, இனியாவது முதல்வர் என்ற முறையில் தனது தலையாயப் பணியான சட்டம் - ஒழுங்கைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். | வாசிக்க > மருத்துவர் மீது தாக்குதலால் காலவரையற்ற வேலைநிறுத்தம்: தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in