Published : 04 Jun 2018 07:30 AM
Last Updated : 04 Jun 2018 07:30 AM

ரெட்டேரி மேம்பால பிளாட்பாரத்தில் கார் மோதி தீப்பிடித்து விபத்து: ஐ.டி. ஊழியர் உடல் கருகி உயிரிழப்பு

மேம்பால பிளாட்பாரத்தில் கார் மோதி தீப்பிடித்த விவகாரத்தில் ஐடி ஊழியர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

வடபழனி குமரன் நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (41). ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார். இவர் தனது காரில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்குச் சென்றிருந்தார்.

பின்னர், நேற்று அதிகாலை 1 மணிக்கு அதே காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ரெட்டேரி மேம்பாலம் வழியாகச் சென்றபோது அங்கு சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதைத் தடுக்க தடுப்புகள் போடப்பட்டிருந்தன. தட்சிணாமூர்த்தி, சாலை தடுப்பில் மோதாமல் இருக்க காரை சற்று திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் பிளாட்பாரத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில், கார் கதவுகள் திறக்க முடியாதபடி அடைத்துக்கொண்டது. இதையடுத்து கார் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் இருந்த தட்சிணாமூர்த்தி உடல் கருகி பலியானார். தகவல் அறிந்து மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர், காருக்குள் இருந்த தட்சிணாமூர்த்தி சடலத்தை மீட்டனர். விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x