Published : 14 Jun 2018 10:20 AM
Last Updated : 14 Jun 2018 10:20 AM
சென்னையில் 2-வது நாளாக நடந்த போலீஸ் சோதனையின்போது தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பிடிப்பட்டனர்.
சென்னையில் கடந்த சில வாரங்களாக வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பைக்குகளில் வரும் மர்ம நபர்கள் சாலையில் செல்லும் பெண்கள், முதியவர்களைத் தாக்கி நகைகள், செல்போன்களைப் பறித்துச் செல்கின்றனர்.
இரவு நேரங்களில் அதிகரித்துவரும் பைக் ரேஸ்களால் சாலைகளில் பொதுமக்கள் விபத்துகளில் சிக்குகின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் தெரிவித்தாலும், போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், இந்த குற்றங்களைக் கட்டுப்படுத்த காவல் துறை அதிகாரிகளுக்கு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தவிட்டார். அதன்படி கடந்த 11-ம் தேதி இரவு வாகன சோதனைகள், ரோந்துப் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர். 2-ம் நாளாக நேற்றும் வாகன சோதனைகள், ரோந்துப் பணிகளில் போலீஸார் தீவிரம் காட்டினர். சென்னையில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 பேர் பிடிபட்டனர். இவை தவிர பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 20 குற்றவாளிகள், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேர் பிடிப்பட்டனர். வாகனச் சோதனையின்போது மது போதையில் வாகனம் ஓட்டிய 53 பிடிப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT