Published : 20 Jun 2018 08:42 PM
Last Updated : 20 Jun 2018 08:42 PM
தமிழகத்தை நாசமாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதிலிருந்தே நக்சலைட்டுகளை ஒடுக்க வேண்டும் என்று நான் கூறி வருகிறேன். அவரது மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பது அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தின் நிலைமை மோசமாகியுள்ளது.
தமிழகத்தை நாசமாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, பயங்கரவாதிகளை ஒடுக்க மாநில அரசுக்குள்ள அனைத்து அதிகாரத்தையும் முதல்வர் பழனிசாமி பயன்படுத்த வேண்டும்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் பயன் பெறுவார்கள்.
மத்திய, மாநில அரசுகள் எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் அதுபற்றி மக்களிடம் பீதியைக் கிளப்பி அதனை முடக்க சில சக்திகள் திட்டமிட்டு வருகின்றன. நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான அந்த சக்திகளை மக்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் தமிழகத்தின் வளர்ச்சி பின்னோக்கிச் சென்று விடும்'' என்றூ பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT