சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை தனியார் நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த ஜிஐ ரீடெயில் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் முறைகேடாக பங்குகளை விற்பனை செய்து அதன்மூலம் கிடைத்த ரூ.195 கோடியை மறைத்து அத்தொகையை ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியர்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிறுவனத்தில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அமலாக்கத் துறைஇயக்குநரக தென்மண்டல அதிகாரிகள் அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியபோது அந்தத் தகவல் உண்மைதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.195 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அரசுடமையாக்க அமலாக்கத் துறை விசாரணை ஆணையம் உத்தரவிட்டது. மேலும் அந்நிறுவனத்துக்கு ரூ.566.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in