“விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” - கார்த்தி சிதம்பரம்

“விஜய்யின் வருகை சீமானுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” - கார்த்தி சிதம்பரம்
Updated on
1 min read

காரைக்குடி: “நாம் தமிழர் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் இல்லாததால் விஜய் வருகை சீமானுக்கு யதார்த்தமான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் நண்பர்கள் கால்பந்து கழகம் பொன்விழா ஆண்டையொட்டி எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 40-க்கும் மேற்பட்ட கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று கார்த்தி சிதம்பரம் எம்பி., போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “விஜய் தனது கொள்ளையை தெளிவாக, வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

மேலும் அவரது மாநாட்டில் உத்வேகம் இருந்தது. அது அமைப்பாக மாறி, தேர்தலை சந்திக்கும் அளவுக்கு செல்லுமா? என்பதை காலம் தான் சொல்லும். சாதுரியமாக அல்லது பிம்பத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். அரசியல் கட்சியின் செயல்பாடு, நடத்தை, கொள்கை போக, போக தான் தெரியும். சீமான் கட்சிக்கு நிரந்தர வாக்குகள் கிடையாது. இதனால் அவருக்கு யதார்த்தமான அச்சம் வந்துள்ளது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in