Published : 05 Aug 2014 12:46 PM
Last Updated : 05 Aug 2014 12:46 PM

பேச்சு போட்டியில் வென்றால் 14 நாட்கள் ஜப்பான் சுற்றுலா: மாணவர்கள் பங்கேற்கலாம்

‘தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், ஜப்பான் அழைத்துச் செல்லப்படுவார்கள்’ என்று சென்னையில் உள்ள ஜப்பான் கலாச்சார மையம் அறிவித்துள்ளது.

ஜப்பான் கலாச்சார மையமான எபிகே-எஒடிஎஸ் டூசோகை, திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாகத் தமிழ்ப் பேச்சுப் போட்டி சென்னையில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு, சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கிலப் பேச்சு போட்டி, அடுத்த மாதம் 13-ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று பிரிவுகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், இரண்டு வார காலம் இலவசமாக ஜப்பான் நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x