Published : 03 Jun 2018 07:51 AM
Last Updated : 03 Jun 2018 07:51 AM

ஆளுநருடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று சந்தித்து பேசினார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பிறகு சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது நில வும் சூழல் குறித்து ஆளுநரிடம் விவாதித்தேன். டெல்லியில் இருந்து எனக்கு கிடைத்த செய்திகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். கூடங்குளம் போராட்டத் தில் இருந்தே தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள் மக்கள் பிரச்சினைகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதும் அதைச் செய்தார்கள். தூத்துக்குடி கலவரத்தின் போது அதுபோன்ற நபர்கள் ஊடுவினார்களா என்பதை விசாரணை ஆணையம்தான் கூற வேண்டும்.

ரஜினிகாந்த் பேசிய சினிமா வசனங்களை என்னிடம் கூற வேண்டாம். நான் அரசியல்வாதி. சினிமா நடிகர்கள் பேச்சை மாற்றி, மாற்றி பேசுவார்கள். எனவே, ரஜினி இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை மாற்றிப்பேசினால், எனது நிலைப்பாட்டை நானும் மாற்ற வேண்டியிருக்கும். எனவே, ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து இப்போது கருத்து கூற முடியாது. சமூக விரோத சக்திகளுக்கு சினிமா நடிகர்களும் ஆதரவு அளிக்கின்றனர்.

திமுக ஆட்சியை விட தற்போதைய ஆட்சி சிறப்பாக உள்ளது. திமுகவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். திமுகவுக்கு தமிழகத்தில் எதிர்காலம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x