மரத்தில் இருந்து குதித்த கைதி உயிரிழப்பு

மரத்தில் இருந்து குதித்த கைதி உயிரிழப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை: சிறை வளாகத்தில் மரத்தில் இருந்து குதித்ததால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகேயுள்ள துறவிக் காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கே.சித்திர வேல் (21). இவர், மாடு திருடிய வழக்கில் அறந்தாங்கி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் கடந்த 5-ம் தேதி அடைக்கப்பட்டார்.

இதனிடையே, கடந்த 13-ம் தேதி சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சித்திரவேல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசா ரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in