Published : 15 Jun 2018 08:50 AM
Last Updated : 15 Jun 2018 08:50 AM
சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று 2 முறை வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் மாசிலாமணி பேசி முடிக்கும் போது, திருக்குறள் ஒன்றை கூறி முடித்தார். அப்போது பேரவையை நடத் திய துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அதில் குறிப்பிட்ட ஒரு சொல்லை நீக்கினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் ஆகிய இருவரும் அந்தக் குறளை நீக்கக் கூடாது. அரசு குறித்து உறுப்பினர் எதுவும் கூறவில்லை என்று வலியுறுத்தினர். தற்போதுள்ள சூழலில் அரசு குறித்து கூறுவதாக உள்ளதால் நீக்கியது சரிதான் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பிறகு திமுக உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பேசி முடித்ததும், அக்கட்சியின் கொறடா அர.சக்கரபாணி எழுந்து தடை செய்யப்பட்ட பொருள் குறித்து பேச முயன்றார். அப்போது, நீதிமன்றத்தில் உள்ள விஷயம் குறித்து பேசக்கூடாது என்று கண்டித்த பேரவைத் தலைவர், சக்கரபாணி பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT