Published : 03 Jun 2018 08:03 AM
Last Updated : 03 Jun 2018 08:03 AM

போராடினால் எதிலும் வெற்றி பெற முடியும்: காவிரி விவகாரம் குறித்து தம்பிதுரை கருத்து

போராடினால் எதிலும் வெற்றிபெற முடியும் என்பதற்கு காவிரி நதி நீர் விவகாரத்தில் கிடைத்த வெற்றியே உதாரணம் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரிக்காக தர்ம போராட்டம், தார்மிக போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி உச்ச நீதிமன்றம் மூலம் காவிரி ஆணையம் குறித்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் அமைக்க போராடிய விவசாயிகள், அரசியல் கட்சியினர், தார்மிக வழியில் போராடிய அனைவருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி. போராடினால் எதையும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இதுவே உதாரணம். இந்த வெற்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பணம்.

காவிரியில் நீர் திறக்கும் அதிகாரம் இனி கர்நாடகாவுக்கு இல்லை. காவிரி ஆணைய உத்தரவின்படி விரைவில் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x