Published : 02 Aug 2014 12:06 PM
Last Updated : 02 Aug 2014 12:06 PM
தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதும், படகு கள் பறிமுதலும் கண்டிக்கத் தக்க செயலாகும். இலங்கை சிறையில் உள்ள 93 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். 62 படகுகளும் திருப்பித் தரப்பட வேண்டும். ஏற்கெனவே 2 கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வும், நலனும் சார்ந்த பிரச்சினையான இதனை உடனுக்குடன் கையாள் வதற்கு மத்திய வெளியுறவுத் துறையில் தனி செயல் அதிகாரியை அரசு செயலாளர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT