Published : 03 Jun 2018 09:52 AM
Last Updated : 03 Jun 2018 09:52 AM

செங்கல்பட்டு அருகே எரித்து கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: குற்றவாளி கைது

செங்கல்பட்டை அடுத்தபழவேலி பகுதியில் கடந்த 28 அன்று அதிகாலை பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதை ரோந்து போலீஸார் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீஸார், அப்பெண்ணின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்தப் பெண் கேரளாவில் காணாமல்போன 20 வயது கல்லூரிப் பெண் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் என்ற பெண்ணாக இருக்கலாம் என சந்தேகித்த கேரளப் போலீ ஸார் மற்றும் அவரது அண்ணன் ஜென்சன் செங்கல்பட்டில் நேற்று உடலை ஆய்வு செய்தனர். இறந்தது ஜேஸ்னா இல்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீஸார் விசாரணையில் எரித்துக் கொலை செய்யப்பட்டது சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொக்கிஷமேரி என்பது தெரியவந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று வேலைக்கு செல்வதற்காக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது இரு சக்கர வாகனத்தை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே போலீஸார் கண்டெடுத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பற்களில் அணிந்திருந்த கிளிப், மூக்குத்தி ஆகியவற்றைக் கொண்டு இறந்தது பொக்கிஷமேரிதான் என்று உறுதிப்படுத்தியதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து எதற் காக கொலை நடந்துள்ளது என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளி கைது

சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பொக்கிஷமேரி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பாலா(40) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் கடந்த 8-வருடமாக காதலித்து வந்துள்ளதாகவும், இதனிடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் விசாரணை செய்து வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x