மோசமான வானிலை: கோவைக்கு திருப்பி விடப்பப்படும் விமானங்கள்

மோசமான வானிலை: கோவைக்கு திருப்பி விடப்பப்படும் விமானங்கள்
Updated on
1 min read

கோவை: மோசமான வானிலை காரணமாக சென்னை - கோழிக்கோடு, தமாம் - கோழிக்கோடு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலை கோவைக்கு திருப்பிவிடப்பட்டன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்ட விமானம் இன்று அதிகாலை 01.53 மணியளவில் கோவைக்கு திருப்பிவிடப்பட்டது. வானிலை சீரான தகவலை உறுதி செய்த பின் மீண்டும் அதிகாலை 3.06 மணிக்கு கோழிக்கோடு புறப்பட்டு சென்றது. அதேபோல், சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் இன்று அதிகாலை 2.12 மணிக்கு கோவைக்கு திருப்பிவிடப்பட்டது. மீண்டும் அதிகாலை 3.23 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு சென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in