Published : 11 Apr 2014 12:56 PM
Last Updated : 11 Apr 2014 12:56 PM
வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் முதல் அடுக்கில் மத்திய படையி னர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்படுவர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வியாழக்கிழமையன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குப்பதிவு முடிந்தபிறகு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். அந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக் கும் அறையில் மத்திய பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபடுவார்கள். அதன்பிறகு, பல அடுக்குகளில் மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
அந்த அறைக்கு ஒரே ஒரு கதவு மட்டும்தான் இருக்கும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த மையங்களுக்கு வெளியில் அரசியல் கட்சியினர் சிறிய கூடாரம் அமைத்து தங்கிக் கொள்ளலாம். வாக்குப்பதிவு மையங்களுக்குள் செல்போனுக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்,
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT