Published : 03 Jun 2018 08:00 AM
Last Updated : 03 Jun 2018 08:00 AM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இன்று தூத்துக்குடி வருகிறார்.
ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்திக்க சீதாராம் யெச்சூரி இன்று தூத்துக்குடி வருகிறார்.
இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (ஜூன் 3-ம் தேதி) தூத்துக்குடி சென்று அங்கு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை சந்தித்து பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT