Published : 24 Jun 2018 10:39 AM
Last Updated : 24 Jun 2018 10:39 AM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருப்பதால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கர்நாடக கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு ஒகேனக்கல் அடுத்துள்ள தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேர்ந்தது. 17-ம் தேதி காலை நிலவரப்படி விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடி அளவுக்கு நீர்வரத்து உயர்ந்ததால், அருவி, ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
பின்னர், நீர்வரத்து குறைந்த தால் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழைப் பொழிவு அதிகரித்ததால், கபினி அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று காலை ஒகேனக்கல் வந்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று மாலை 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால், நேற்று முதல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT