Published : 05 Jun 2018 08:33 AM
Last Updated : 05 Jun 2018 08:33 AM

காளையை அடக்க சொன்னால் என்பாடு திண்டாட்டம்தான்: பேரவையில் ஓபிஎஸ் நகைச்சுவை

‘‘என்னை யாரும் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்க வேண்டாம். யாராவது காளையை அடக்குங்கள் என சொன்னால் என்பாடு திண்டாட்டமாகிவிடும்’’ என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய உணவுத் துறை அமைச் சர் ஆர்.காமராஜ், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பற்றி குறிப்பிடும் போது ‘ஜல்லிக்காட்டு நாயகன்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட ஓபிஎஸ், ‘‘அமைச்சர் காமராஜ் என்னை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்றார். இனி அப்படி யாரும் என்னை அழைக்க வேண்டாம். ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க பலர் என்னை அழைக்கிறார்கள். நானும் செல்வதுண்டு. ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைப்பதைக் கேட்டு காளையை அடக்குங்கள் என யாராவது கேட்டுவிட்டால் என் பாடு திண்டாட்டமாகிவிடும்’’ என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

துணை முதல்வரின் பதிலால் பேரவையில் சிரிப்பலை எழுந் தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x