

தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என விசிக துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம்:
இந்தத் தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து நிறைவேற்றும் என கோஷமிட்டனர்.
உளுந்தூர்பேட்டையில் திரண்ட மகளிர்: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டை ஒட்டி, உளுந்தூர்பேட்டை திருச்சி சாலையில் உள்ள மாநாட்டுத் திடலில் 75,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து இருக்கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு மகளிர் அமர்ந்திருந்தனர். மாநாட்டில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், மேடையில் கொள்கை விளக்கப் பாடல்கள் பாடப்பட்டது. அப்போது மாநாட்டுத் திடலில் திரண்டிருந்த பெண்கள் ஆட்டம், பாட்டம் என ஆர்ப்பரித்தனர். இதனை மேடையில் இருந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.
கடையை மூட வலியுறுத்திய காவல் துறையினர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றதை ஒட்டி விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமான வாகனங்களில் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். அப்போது வணிகள பாதுகாப்பு நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை நகரம் முழுவதும் கடையை மூட வணிகர்களுக்கு வலியுறுத்தினர். அதன் பேரில் வணிகர்கள் வணிகர்கள் கடையை மூடினர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர்.
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்: உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நான்கு சக்கர வாகனத்தில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும், மாநாட்டு பந்தல் முன் வாகனத்தை ஓட்டி வந்தபோது, அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளர் பிரபாவதி, வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, விசிக ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் அவரைப் பிடித்து தள்ளிவிட்டு, நிலை குலையச் செய்தனர். இதனால் பெண் ஆய்வாளர் கீழே விழந்தார். அருகில் வேறு காவலர்கள் யாரும் இல்லாததால், அவர் யாரும் காப்பாற்றவும் ஆளில்லாமல் தனிமையில் இருந்தார். விசிகவினரோ கோஷமிட்டவாறு அங்கிருந்து புறப்பட்டனர்.
செய்தியாளர்கள் இருக்கையில் பாய்ந்த விசிகவினர்: மாநாட்டு பந்தல் எதிரே செய்தியாளர்களுக்கு இடதுபுறம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது மாநாட்டு மேடையில் திருமாவளவன் தீர்மானங்களை வாசிக்கத் துவங்கினார். அவர் வாசிக்கத் துவங்கியது முதல், விசிக தொண்டர்கள் தடுப்புகள் மீது ஏறி செய்தியாளர்கள் இருக்கைப் பக்கம் வந்து அமர்ந்தனர். இதை அங்கிருந்த கண்காணித்த மாநாட்டு பாதுகாப்பு நபர்கள், அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள் தடுப்புக் கட்டைகளை மீறி உள்ளே புகும் வகையில் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். இதை மேடையில் இருந்து கவனித்த திருமாவளவனும், அவர்களை கண்டிக்கும் தொனியில் பேசியும், பொருட்படுத்தாத தொண்டர்கள், செய்தியாளர்கள் பக்கம் நுழைந்து மேடையை நோக்கி முன்னேறியதால், செய்தியாளர்களுக்கும் விசிக தொண்டர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அவர்கள் தங்களது இருக்கையில் இருந்து வெளியேறினர்.