Published : 06 Jun 2018 11:22 AM
Last Updated : 06 Jun 2018 11:22 AM

வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் விரைவில் புதுப்பிக்கப்படும் என செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் கு.க.செல்வம் (ஆயி ரம் விளக்கு), ‘‘திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இங்கு சமூக விரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. எனவே, வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என கேள்வி எழுப்பினார்.

ரூ.10 லட்சம் செலவில்...

அதற்குப் பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘‘வள்ளுவர் கோட்டத்தை அரசு முறையாக பராமரித்து வரு கிறது. ரூ.10 லட்சம் செலவில் சேதமடைந்த சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சிற்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. அங்கு சமூக விரோதச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.

அங்குள்ள அரங்கத்தில் கண்காட்சி, கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வள்ளுவர் கோட்டம் விரைவில் மிகச்சிறப்பான முறையில் புதுப்பிக்கப்படும். செய்தித் துறை மானியக் கோரிக்கையின்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x