Published : 08 Jun 2018 08:00 AM
Last Updated : 08 Jun 2018 08:00 AM

தீப்பெட்டி தொழிலாளருக்கான காப்பீட்டுத் தொகை உயர்வு: சட்ட மசோதா தாக்கல்

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியம் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் தொகையை ரூ. 1 லட்சமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தாக்கல் செய்த சட்ட மசோதாவில் ‘‘ஆபத்தான தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 50 ஆயிரத்துக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த காப்பீட்டுத் தொகையை ரூ. 1 லட்சமாக உயர்த்த சட்டத் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது’’ என கூறப்பட் டுள்ளது.

சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தாக்கல் செய்த மற்றொரு சட்ட மசோதாவில், ‘‘தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக் காத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை நாட்கள்) சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x