Published : 09 Jun 2018 07:41 AM
Last Updated : 09 Jun 2018 07:41 AM

பட்டு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசு

சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் பி.பெஞ்சமின் அறிவித்தார்.

பேரவையில் பட்டு வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில், அமைச்சர் பி.பெஞ்சமின் வெளியிட்ட அறிவிப்புகள்:

உயர் விளைச்சல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க, ஏக்கருக்கு ரூ.10,500 வீதம் நிதியுதவி வழங்கப்படும். மல்பெரி தோட்டங்களில் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க உதவித்தொகை வழங்கப்படும். சிறந்த பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட அளவில் ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் மாநில அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரூ. ஒரு லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x