Published : 17 Jun 2018 09:56 AM
Last Updated : 17 Jun 2018 09:56 AM
அதிமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையேயான பூசல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மக்கள் நலத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்காமல் தள்ளிப் போகின்றன என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, கட்சியினர் இல்ல நிகழ்வுகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 18 எம்எல்ஏக்கள் வழக்கில் 3-வது நீதிபதியின் தீர்ப்பு காலம் கடக்காமல் இருக்க வேண்டும். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள குளறுபடியே இதற்கு காரணம்.
அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் இடையேயான பூசல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மக்களுக்கு பயனளிக்கும் நல்ல திட்டங்கள் தமிழகத்துக்குக் கிடைக்காமல் தள்ளிப்போகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT