Published : 20 Jun 2018 11:15 AM
Last Updated : 20 Jun 2018 11:15 AM

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக வழக்கு: எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறை மீது அதிருப்தியும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து எஸ்.வி.சேகர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, அவரை கைது செய்ய விதித்திருந்த தடையை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் எஸ்.வி.சேகரை வரும் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு அல்லிக்குளம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் எஸ்.வி.சேகர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அல்லிக்குளம் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x