Published : 03 Jun 2018 07:53 AM
Last Updated : 03 Jun 2018 07:53 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெ.தீபக் உட்பட 3 பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை ஆணையர் ராமலிங்கம், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோர் ஆஜரானார்கள்.
அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். மேலும் சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயனும் நேற்று ஆஜரானார்.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அர்ச்சனா, பிரசன்னா ஆகியோருக்கும், செவிலியர்கள் ரேணுகா, ஷீலா ஆகியோருக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அர்ச்சனா, ஷீலா ஆகியோர் வரும் 5-ம் தேதியும், பிரசன்னா, ரேணுகா ஆகியோர் 6-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT