செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1-ல் ஆஜராக உத்தரவு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: குற்றச்சாட்டு பதிவுக்காக அக்.1-ல் ஆஜராக உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடந்த 2011-15 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பலருக்கும் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிரான இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கின் விசாரணைக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதாகக் கூறி அதற்கான உத்தரவை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதையடுத்து இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக விசாரணையை வரும் அக்.1-க்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம்செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் ஆஜராக உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in