Published : 24 Jun 2018 08:30 AM
Last Updated : 24 Jun 2018 08:30 AM

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் தமிழகம், புதுவை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண் டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்துக்கு தென்கிழக்கு திசை யில் இருந்து மேற்கு நோக்கி பலத்த காற்று வீசி வருகிறது. அதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச் சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்திலும் தென் தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் அலைகளின் சீற்றமும் அதிகமாக உள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குறிப்பாக குளச்சல் மற்றும் தனுஷ்கோடி வரையிலான பகுதியில் 3.5 மீட்டர் உயரம் வரை அலைகள் மேலெழும்பக்கூடும். எனவே அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாகக் கூடும்.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கோவை மாவட்டம் சின்னகல்லார், வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x