Published : 17 Jun 2018 11:12 AM
Last Updated : 17 Jun 2018 11:12 AM
தமிழகத்தில் இருந்து ஆந்திரா வழியாக கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற லாரி, நேற்று இரவு ஆந்திர மாநிலம் குப்பம் வனப் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து குப்பம் போலீஸார் கூறியதாவது:
வாணியம்பாடி- கி.கிரி நோக்கி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சரக்கு லாரி ஒன்று மாங்காய்கள் ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக கிருஷ்ணகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
குப்பம் அருகே உள்ள நாய னூரு வனப் பகுதி வழியாக நேற்று இரவு சென்றபோது, வனப் பகுதியில் ஒரு வளைவில் லாரி நிலை தடுமாறி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் லாரி யில் பயணித்த வேலூர் மாவட்டத் தைச் சேர்ந்த 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20 பேர் காயம்
மேலும், இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், குப்பம் போலீஸார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு குப்பம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பள்ளத்தில் விழுந்த லாரியை மீட்க தீயணைப்புப் படையினர், உள்ளூர் ஆட்கள், கிரேன் போன்றவை வரவழைக்கப்பட்டன.
மீட்புப் பணியில் தொய்வு
ஆனால், வனப் பகுதி என்பதாலும், இரவு நேரத்தில் முற்றிலும் வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
எனினும், நேற்று நள்ளிரவைத் தாண்டியும் போலீஸ், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT