Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

ஐஐடியில் ‘ஸ்பீக் அப் 14’ பல்துறை கருத்தரங்கம்

இந்திய மாணவர்களுக்காக ‘ஸ்பீக் அப் 14’ என்னும் பல்துறை கருத் தரங்கம் சென்னை ஐஐடியில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் ‘ஸ்பீக் அப் 14’ கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியாவிலுள்ள நூற்றுக்கும் அதிகமான பொறியியல் மாணவர் கள் இணைந்து பெனும்பரா என்னும் இணைய இதழை நடத்தி வருகி றோம். இந்த இதழுக்காக நாடு முழுவதும் நிறைய மாணவர்களை சந்தித்து இருக்கிறோம். நம் நாட்டுமாணவர்களுக்கு பல துறைகள் பற்றிய ஆர்வமும் அறிவும் உள்ளபோதிலும் அதை வெளிப் படுத்தக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருப்பதில்லை.

எனவே இந்த ஆற்றலை வெளியே கொண்டு வரும் விதமாக சமூகம், அரசியல், உடல்நலம், தொழில்நுட்பம், சினிமா, எதிர்கால இந்தியா என பல்வேறு துறைகளின் கீழ் சிறப்பு ‘ஸ்பீக் அப் 14’ என்னும் பல்துறை கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளோம்.

சென்னை ஐஐடியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட் டுள்ள இக்கருத்தரங்கு வரும்23-ம் தேதி நடக்க உள்ளது. இந்தியா முழுவதும் 750-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 200 பேரை தேர்வு செய்து அழைத்திருக்கிறோம்.

இந்த கருத்தரங்கில் சின்னத்திரை கோபிநாத், சாஸ்த்ரா பல்கலைக்கழக டீன் வைத்யா சுப்ரமணியம், டிசிஎஸ் நிறுவனத் தலைவர் ரவி விஸ்வநாதன் உட்பட பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x