Published : 14 Jun 2018 09:18 PM
Last Updated : 14 Jun 2018 09:18 PM

பிறை தென்படாததால் சனிக்கிழமை ரமலான்: நாளை அரசு விடுமுறை ரத்து

ரம்ஜான் பிறை தென்படாததால் நாளை மறுநாள் சனிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதையொட்டி நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறையையும் தமிழக அரசு சனிக்கிழமைக்கு மாற்றி அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை இந்த ஆண்டு வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ரமலான் பண்டிகைக்கு முன்னர் இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான 30 நோன்பு கடைபிடிக்கப்படும். 30 நோன்புக்கு பின்னர் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இஸ்லாமியர்கள் பிறைக்கணக்குப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்நிலையில் 29 நோன்பு முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை என அறிவிக்கப்பட்டு தமிழக அரசும் அன்று விடுமுறை அறிவித்திருந்தது.

ஆனால் மாலை வரை பிறை தெரியாததால் தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தின் முஹம்மத் அய்யூபி நாளை நோன்பு தொடரும் என அறிவித்து ரமலான் பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படுவதாக அறிவித்தார்.

தமிழகத்தில் நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்ததால் தமிழக அரசு வெள்ளிக்கிழமை (நாளை) அறிவித்திருந்த விடுமுறையை ரத்து செய்து அறிவித்துள்ளது. விடுமுறை ரத்தானதால் நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் சனிக்கிழமை ரமலான் பண்டிகையை ஒட்டி விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x