Published : 13 Jun 2018 07:41 AM
Last Updated : 13 Jun 2018 07:41 AM

கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, வால்பாறை, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் மேற்கு பருவமழை காற்று வலு வாக இருப்பதால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதுதவிர, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று பல மாக வீசும். அதிகபட்ச வெப்ப நிலையாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகல்லாறு, வால்பாறையில் தலா 13 செமீ மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் தேவாலா, தேனி மாவட்டம் பெரியாரில் தலா 9 செமீ, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 7 செமீ, உதகையில் 3 செமீ, கோவையில் 2 செமீ மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x