Published : 22 Jun 2018 07:42 AM
Last Updated : 22 Jun 2018 07:42 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 5 மாதங்களுக்குப் பின்னர் 50 அடியை எட்டியது. நீர்வரத்து விநாடிக்கு 4,586 கனஅடியாக குறைந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விநாடிக்கு 35,000 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் மழை குறைந்ததைத் தொடர்ந்து கபினியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 10,026 அடியாக குறைந்தது. நீர்மட்டம் 49.78 அடியாகவும், நீர் இருப்பு 17.67 டிஎம்சியாகவும் இருந்தது.
இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 4,586 கனஅடியாக குறைந்தது. கடந்த ஜன.20-ம் தேதிக்கு பின்னர் அணையின் நீர்மட்டம் நேற்று 50 அடியைக் கடந்து 50.32 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 18.01 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT