Published : 17 Jun 2018 09:10 AM
Last Updated : 17 Jun 2018 09:10 AM

டெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி: பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்?

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் கே.பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இன்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலங்களுக்கு நிதி அளிக் கும் அமைப்பான நிதி ஆயோக் கின் நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை நடக்கிறது. நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.

சென்னை விமான நிலையத் தில் இருந்து மாலை 6.20 மணிக் குச் செல்லும் விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரவு 9.30 மணிக்கு டெல்லி தமிழ்நாடு இல்லம் சென்ற அவரை மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை யின் கலாச்சார மையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். தொடர்ந்து 4 மணி வரை நடக்கும் இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லம் வரும் அவர் இரவு 8 மணி வரை ஓய்வெடுக்கிறார். பிறகு இரவு 9 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

இதற்கிடையில், பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் சார்பில் நேரம் கோரப்பட்டுள்ளது. நேரம் அளிக்கும் பட்சத்தில், அவரைச் சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்தது தொடர்பாக நன்றி தெரிவிப்பதுடன், தமிழகத்துக் கான பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x