Published : 30 May 2018 07:54 AM
Last Updated : 30 May 2018 07:54 AM
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) தனது சொந்த குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக என்எச்ஆர்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீ ஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த என்எச்ஆர்சி தனது சொந்த குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.
இந்த குழுவானது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், பிற சாட்களிடம் விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT