Published : 30 May 2018 07:54 AM
Last Updated : 30 May 2018 07:54 AM

துப்பாக்கிச் சூடு சம்பவம் தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடி வருகிறது

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) தனது சொந்த குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக என்எச்ஆர்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீ ஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11-க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த என்எச்ஆர்சி தனது சொந்த குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த குழுவானது துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், பிற சாட்களிடம் விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 25-ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x