Published : 30 May 2018 11:08 AM
Last Updated : 30 May 2018 11:08 AM

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: அரசுப் பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

 இன்று வெளியான பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23-ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, இன்று (புதன்கிழமை) வெளியான பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை.

8 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 83.9% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.4% ஆகவும், மெட்ரிக் பள்ளிகளில் 98.6% ஆகவும், இருபாலர் பள்ளிகளில் 91.6% ஆகவும், பெண்கள் பள்ளிகளில் 94.9% ஆகவும், ஆண்கள் பள்ளிகளில் 80.9% ஆகவும் தேர்ச்சி விதிகம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x