Published : 05 May 2018 09:27 AM
Last Updated : 05 May 2018 09:27 AM

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரான மாணவர் முகநூல் தோழி வீட்டில் மர்மச் சாவு

ஐஏஎஸ் போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், பேஸ்புக் மூலம் நட்பான தோழி வீட்டில் மர்ம மான முறையில் இறந்தார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன் (22). பூந்தமல்லியில் தங்கியிருந்து அண்ணாநகரில் உள்ள தனியார் பயிற்சி வகுப்பில் ஐஏஎஸ் போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இவருக்கு பேஸ்புக் மூலம் சட்டக் கல்லூரி மாணவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3-ம் தேதி அதிகாலை அவரது வீட்டுக்குச் சென்ற தென்னவன், அங்கு மர்மமான முறையில் இறந்துள்ளார். உடனே, திருவொற்றியூர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தென்னவன் உடல்நலக் குறை வால் உயிரிழந்தாரா, கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. “பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறுதி முடிவுக்கு வர முடியும்” என்று போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x