பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பாலம் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று காலை நத்தம்பட்டி அருகே அர்ஜூனா நதியில் கட்டப்பட்டுவரும் பாலப் பணிக்காக வந்த தொழிலாளர்கள், பள்ளத்தில் 2 பேர் பைக்குடன் இறந்து கிடப்பதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் உடல்களையும் நத்தம்பட்டி போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த இருவரும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜெயபிரகாஷ் (20), தர்மராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி (19) எனத் தெரிய வந்தது.

இவ்விருவரும் சிவகாசியில் உள்ள உறவினர்வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகநேற்று முன்தினம் இரவு தேனியில் இருந்து பைக்கில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிக்காக தோண்டியபள்ளத்தில் பைக் கவிழ்த்து விபத்துஏற்பட்டுள்ளது என போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in