Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:00 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பணியின்போது உயிரிழந்த 3 போலீஸாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட தலா ரூ.3 லட்சத்தை மாவட்ட எஸ்பி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின், ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜகிளி மற்றும் மாமல்லபுரம் காவல்நிலைய காவலர் ரமேஷ், காஞ்சிபுரம் விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகிய 3 பேரும் பணியில் இருந்தபோது உயிரிழந்தனர். இவர்களின், குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட தலா ரூ. 3 லட்சம் நிதிக்கான காசோலையை, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT