Published : 02 May 2018 09:36 AM
Last Updated : 02 May 2018 09:36 AM
அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்றும், நாளையும் 7 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:
அரக்கோணம் ரயில்வே வளாகத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணி காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் (வண்டி எண்.56001/02), அரக்கோணம் - செங்கல்பட்டு - அரக்கோணம் (56003 /04), அரக்கோணம் - செங்கல்பட்டு - அரக்கோணம் (56005 / 06), அரக்கோணம் - காட்பாடி - அரக்கோணம் (56007 /08), அரக்கோணம் - வேலூர் - அரக்கோணம் (56009 / 10), அரக்கோணம் - கடப்பா - அரக்கோணம் (56011 / 12), அரக்கோணம் - வேலூர் - அரக்கோணம் (56013 /14) ஆகிய ரயில்கள் இன்றும், நாளையும் (2 மற்றும் 3-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் சில விரைவு ரயில்களின் நேரம் இன்றும், நாளையும் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, மங்களூர் - சென்னை சென்ட்ரல் மெயில் (வண்டி எண். 12602) மங்களூரில் மதியம் 1.25 மணிக்குப் பதிலாக மதியம் 2.10 மணிக்கு புறப்படும். சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டி மெயில் (வண்டி எண்.11028) சென்னையிலிருந்து இரவு 11.55 மணிக்குப் பதிலாக அதிகாலை 3 மணிக்கு புறப்படும்.
மேலும், இன்று (மே 2) சென்னை வந்தடைய வேண்டிய தானாபூர் - பெங்களூரு சங்கமித்ரா விரைவு ரயில், பரவுனி - எர்ணாகுளம் ரயில், டேராடூன் - மதுரை ரயில், தன்பாத் - ஆலப்புழா ரயில், முசாபர்பூர் - யஸ்வந்த்புர் ரயில், சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய குவாஹாத்தி - பெங்களூரு கன்டோன்மென்ட் விரைவு ரயில் மற்றும் நாளை (மே 3-ம் தேதி) சென்னை வந்தடைய வேண்டிய தானாபூர் - பெங்களூரு சங்கமித்ரா ரயில், தர்பங்கா - மைசூரு ரயில், தன்பாத் - ஆலப்புழா ரயில், ஷாலிமார் - திருவனந்தபுரம் ரயில், பெரம்பூர் வந்தடைய வேண்டிய குவாஹாத்தி - பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் ஆகிய விரைவு ரயில்கள் சென்னை சென்ட்ரல், பெரம்பூர் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுவதற்குப் பதிலாக, கூடூர், ரேணிகுண்டா, மேல்பாக்கம் மற்றும் ஜோலார்பேட்டை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, திருத்தணி மற்றும் ஜோலார்பேட்டையில் உள்ள விசாரணை கவுன்ட்டர்களில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT