Published : 07 May 2018 09:25 AM
Last Updated : 07 May 2018 09:25 AM

வாகன சோதனையில் சிக்கிய பிரபல ரவுடி மாயக்கண்ணன் புழல் சிறையில் அடைப்பு

கொலை, கொலை முயற்சி உட்பட 55 வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி மாயக்கண்ணன் வாகன சோதனையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மாலை பெரம்பூர் நெடுஞ்சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை சோதனையிட்டதில், அதற்குள் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீஸார், காரை ஓட்டிவந்த அயனாவரத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன் (34) என்பவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x